குமாரபாளையம்: குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் வசிப்பவர் சேவகன், 52. இவரது மனைவி சுமதி, 43. இவர்களுக்கு சந்தோஷ்குமார், 11, மவுனேஷ், 8, ஜீவா, 4, ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மதுரை, மேலூர், ஜம்பட்டி பகுதியில் வசித்த இவர்கள், கடந்த, மூன்று மாதங்களுக்கு முன்பு தான் குமாரபாளையத்திற்கு வந்தனர். கடந்த, 8ல் சகோதரர்களுடன் சண்டை போட்ட சந்தோஷ்குமார், அத்தை வீட்டுக்கு போவதாக கூறி, வீட்டை விட்டு வெளியேறினார். குமாரபாளையம் போலீசார் சிறுவனை தேடி வந்தநிலையில், திண்டுக்கல்லில் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று அத்தை பார்வதி வீட்டிலிருந்த சிறுவனை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE