நாமக்கல்: நாமக்கல் அருகே, வாகனம் மோதி, தொழிலாளி பலியானார். நாமக்கல் அடுத்த, செல்லியூரை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரன், 70. அவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு, வள்ளிபுரம்பாலப்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement