மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பழமை வாய்ந்த தெப்பக்குளத்தில் முட்செடிகள் ஆக்கிரமித்து, விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மல்லசமுத்திரத்தில் இருந்து, மாமுண்டி செல்லும் சாலையில், பழமை வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. ஐப்பசி மாதத்தில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இங்கு கம்பம் விட்டு விழா நடக்கும். தற்போது, கடந்த சில மாதங்களாக குளத்தில் அதிகளவில் முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளது. அருகில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முட்செடிகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE