கரூர்: கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின், மாவட்ட குழு கூட்டம், துணை தலைவர் கல்யாணி தலைமையில், சுங்ககேட் சங்க அலுவலகத்தில் நடந்தது. அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு, 10 லட்ச ரூபாய், உதவியாளர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 20, 21ல் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, பிப்ரவரி, 5 ல் சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட, சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், அங்கன்வாடி சங்க துணைத்தலைவர் புஷ்பவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE