கரூர்: கரூர் மாவட்ட, செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில், தலைவர் ராஜா தலைமையில், சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின், 89வது நினைவு நாள், அனுசரிப்பு நிகழ்ச்சி வெங்கமேட்டில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கி மனுவை பேரவையினர், அமைச்சரிடம் வழங்கினர். கரூர் வடக்கு நகர, அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் உடனிருந்தார். தொடர்ந்து, டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன் பெரியசாமி, பொருளாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE