குளித்தலை: குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., பி.உடையாப்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 45. மனைவி வெங்கடேஸ்வரி. 45. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், மொபட்டில் உடையாப்பட்டி கீரனூர் நெடுஞ்சாலை பள்ளிப்பட்டியில் சென்று கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்து வந்த செந்தில், அவரது சகோதரர் பால் வியபாரி ராஜகோபால், 43, ஆகியோர், குடும்பத்தகராறு காரணமாக வெங்கடேஸ்வரியை வாகனத்திலிருந்து கீழே தள்ளி, தாக்கினர். மிரட்டலும் விடுத்தனர். வெங்கடேஸ்வரி கொடுத்த புகார்படி, செந்தில், ராஜகோபால் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE