கடலுார் : கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார். அமைச்சர் சம்பத் மினி கிளினிக்கை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிப் பேசியதாவது:கிராமங்களில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதனை மாற்றும் வகையில் அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் எளிதாக மருத்துவ வசதி கிடைப்பதற்கு அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார்.
கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளரை கொண்டு காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் சனிக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் செயல்படும். கடலுார் மாவட்டத்திற்கு தற்போது 61 மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.விழாவில் துணை இயக்குனர் (சுகாதாரம்) செந்தில்குமார், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுார், விசூர், சத்திரம், கடலுாரில் ராசாப்பேட்டை, கீழ்குமாரமங்கலம் பகுதிகளிலும் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE