விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார்.நிர்வாக அலுவலர் புனிதன், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.விழாவில், பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தப்பட்டது. ஆசிரியை அபிநயா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE