பாகூர் : தவளக்குப்பம் அருகே முன் விரோதத்தில் தாக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவத்தில் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் விஜயன், 25; இவர் நண்பர்களுடன் கடந்த 1ம் தேதி மாலை, பூரணாங்குப்பத்தில் இருந்து புதுக்குப்பம் நோக்கி சென்றார். அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் மடக்கி, விஜயன் மீது தாக்குதல் நடத்தியது.இதில், படுகாயமடைந்த விஜயன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ, கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து குமாரவேலு, ராஜசேகர், அருணாச்சலம், சபரி, பிரவீன், ராகவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி தவளக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE