விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி நடந்தது.
விருத்தாசலம் நகராட்சி சன்னதி வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், புகை மருந்து தெளித்து, பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர் கோவிந்தசாமி, துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் அன்பரசி, கள உதவியாளர் பாலச்சந்தர், கொசுப்புழு அழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.தொடர்ந்து, கொசுப்புழு உற்பத்தி பகுதிகளை தேர்ந்தெடுத்து மருந்து தெளிக்கப்பட்டது. காய்ச்சல் பரவும் விதம், தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE