புவனகிரி : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 19ம் தேதி வரை நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு அபிநயா புத்தக கண்காட்சி, சிதம்பரம் கீழ வீதி, கோதண்டராமன் திருமண மண்டபத்தில் கடந்த நவம்பர் 27ம் தேதி கண்காட்சி துவங்கியது.காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.கண்காட்சியில், கல்வி, யோகா, இலக்கியம், தத்துவம், உளவியல், வரலாறு, ஆன்மிகம், சமையல்கலை உட்பட 5,000 தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE