கடலுார் : முழு அதிகாரம் வழங்க வேண்டுமென ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
தலைவர் சுகுமாறன் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அளித்துள்ள மனு:ஊராட்சி தலைவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு முடிந்த நிலையில், ஊராட்சிக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும்.ஊராட்சியில் செய்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு தேவையான நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.துணைத் தலைவர்கள் மாறன், ஸ்ரீராம், இணைச் செயலாளர்கள் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE