போபால்:மத்திய பிரதேசத்தில், விஷ சாராயம் குடித்த, 11 பேர், பரிதாபமாக பலியாயினர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோரினா மாவட்டம், பஹாவளி கிராமத்தில், விஷ சாராயம் குடித்த சிலருக்கு, வயிற்று போக்கு ஏற்பட்டது.இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதேபோல, மன்புர் கிராமத்தில், விஷ சாராயம் குடித்து, எட்டு பேர் பலியாயினர். இரு கிராமங்களிலும் விஷ சாராயம் குடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் ஏழு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE