பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த திட்டக்குடி வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் மாவட்டம், சின்ன காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 27; இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான திட்டக்குடி பகுதி சூரியா 24; ஆனந்த் 30; ஆகியோருடன், கன்னியக்கோவில் பகுதியில், தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர், மூவரும், டி.வி.எஸ். அப்பாச்சி பைக்கில், சின்ன காட்டுப்பாளையம் நோக்கி சென்றனர். பைக்கை, ரஞ்சித்குமார் ஓட்டிச் சென்றார்.புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பு அருகே கடலுார் நோக்கி சென்ற சுவிப்ட் கார், பைக் மீது மோதியது. இதில், ரஞ்சித்குமார், சூரியா, ஆனந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஆனந்த் இறந்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE