கடலுார் : கடலுார் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பாவை விழா போட்டிகள் இணையதளம் மூலம் நடந்தது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடல் ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டிகள் கடலுார் திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவிலில், இணையதளம் மூலம் நடந்தது. போட்டியை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் முருகன் உடனிருந்தார்.பாடல் ஒப்புவித்தல் போட்டியில் 90 பேரும், கட்டுரைப் போட்டியில் 47 பேரும் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE