புதுச்சேரி : புதுச்சேரியில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; 28 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
மாநிலத்தில் 3,637 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பாதித்த 293 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 28 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். அரியாங்குப்பத்தை சேர்ந்த 38 வயது ஆண் இறந்தார்.மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 495 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 563 ஆகவும், உயிரிழப்புகள் 639 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE