விழுப்புரம் : துாய்மை காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம், பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வீரப்பன், டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் பாலசந்தர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர், துாய்மை காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.அமைப்பாளர் அனிதா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE