திண்டிவனம் : திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை மேம்பாலத்தின் கீழ், வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் ஓட்டி வந்த பைக்கிற்கு ஆவணங்கள் இல்லாததால், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில், அவர், திண்டிவனம் நியூ சினிமா தியேட்டர் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வக்குமார், 21; என்பதும், அவர் ஓட்டி வந்த பைக், திருடியதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், விசாரணையில் ரோஷணை, மயிலம் ஆகிய பகுதியில் மொத்தம் ஐந்து விலை உயர்ந்த பைக்குகளை திருடியதும், இவர் மீது திண்டிவனம் பெலாக்குப்பம் சாலையில் நடந்த ஒரு கொலை வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. அதன்பேரில், திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE