செஞ்சி : செஞ்சியில் பா.ஜ., சார்பில் பொங்கல் விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சார்பில் செஞ்சியில் நம்ம ஊர் பொங்கல் விழா நடந்தது. மாவட்ட தலைவர், கலிவரதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களான மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்திய சுந்தர், கலை இலக்கிய பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் ஆகியோர் பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.மாவட்ட பார்வையாளர் செங்கல்பட்டு ரவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், தர்மராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.
கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன், ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சுகுமார், தொகுதி அமைப்பாளர்கள் மோகன், ராஜா, மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், சீனிவாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் நரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீரங்கன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜ்கபூர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோகுல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பசுமலை, வெளிநாடு வாழ் பிரிவு மாநில செயலாளர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் ராமு நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE