உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே புதுச்சேரியிலிருந்து கடத்திவந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆத்துார் பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் தங்கமணி 24, அர்ஜூனன் மகன் தியாகராஜன் 28 ஆகியோர் என தெரியவந்தது.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தங்கமணி, தியாகராஜன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களையும், ஆம்னி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE