கடலுார் : கூலி உயர்வு வழங்கக்கோரி, கடலுார் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் டாஸ்மாக் குடோனில் 60க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கூலியாக பெட்டி ஒன்றுக்கு 1.20 ரூபாய் என 10 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் நிலையில், 3.50 ரூபாயாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில், கூலி உயர்வு வழங்கக்கோரி நேற்று தொழிலாளர்கள், முதுநகர் டாஸ்மாக் குடோனில், உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டாஸ்மார்க் மேலாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் பிப்வரி 1ம் தேதி கூலி உயர்வு தொடர்பாக பேசுவது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., மாவட்டச் செயலாளர் கருப்பையன், இணைச் செயலாளர் சுப்புராயன், டாஸ்மாக் சுமைப்பணி சங்கத் தலைவர் முருகன், செயலாளர் தண்டபாணி உட்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement