திண்டிவனம் : அடிப்படை வசதி கோரி திண்டிவனத்தில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரோஷணை 3வது வார்டில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களை அகலப்படுத்தி, சிமெண்ட் சாலை அமைத்து தர வலியுறுத்தி திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டிவனம் நகர மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காந்திராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கோதண்டம், பகுதி செயலாளர் ராமதாஸ், மாவட்டக்குழு யுவராஜ், நகர செயலாளர் கோவிந்து ஆகியார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE