நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், திடீர்குப்பம் செல்லும் வழியில் சேதமான கல்வெர்ட்டை அகற்றி புதிதாக கட்ட டெண்டர் விட்டு 2 ஆண்டுகளாகியும் பணி துவங்கப்படவில்லை.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திடீர்குப்பத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.அந்த பகுதிக்குச் செல்ல வெள்ளப்பாக்கத்தான் வாய்க்காலின் குறுக்கே உள்ள கல்வெர்ட்டைக் கடந்து செல்ல வேண்டும். இந்த கல்வெர்ட்டின் இரு புறமும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல மாதங்களாகியும் கட்டப்படவில்லை.இந்நிலையில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கல்வெர்ட் கட்ட டெண்டர் விட்டு 2 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை பணி துவங்கவில்லை.நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கல்வெர்ட்டின் ஒரு பகுதி உடைந்து சேதமானது. இதில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க பேரிகார்டு போட்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். கல்வெர்ட் முழுதும் உடைந்து சேதமடையும் முன் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE