சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லையில் தி.மு.க.. மக்கள் சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் முன்னாள் சேர்மன் மதியழகன் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் பழனி மனோகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ராணி நடராஜன், ஊராட்சி செயலாளர் ராஜசேகர்வரவேற்றனர்.ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராசு, பொருளாளர் முத்துராமன், ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், அ.தி.மு.க.,வை நிராகரிப்போம், ஊழல் ஆட்சிக்கு முடிவு செய்து வீட்டிற்கு அனுப்ப மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டளித்து தமிழகத்தை காக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE