விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்து முன்னணி விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காந்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தரணிதரன், வெங்கட், கிரி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட செயலாளர் ராமு, விவேகானந்தர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறப்புரையாற்றினார்.விழிப்புணர்வு ஊர்வலத்தை, கோட்ட தலைவர் சிவா துவக்கி வைத்தார். இதில், கோலியனுார் கூட்ரோட்டில் இருந்து இந்து முன்னணியினர் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, நிர்வாகிகள் அரி, வெங்கடபதிராஜ், மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் சிவபெருமாள் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE