மதுரவாயல் : மதுரவாயல், ஆலப்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா, 18; துணிக்கடையில் பணிபுரிந்தார்.
இதே கடையில் வேலை செய்த, அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த மோகன், 22, என்பரை காதலித்து வந்தார்.நேற்று முன்தினம், தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி, பவித்ரா கேட்டுள்ளார். 'வேலையில் இருப்பதால், வர முடியாது' என, மோகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரக்தியடைந்த பவித்ரா, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி, மொபைல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். பின், பலமுறை மோகன் போன் செய்தும், பவித்ரா போனை எடுக்கவில்லை.வீட்டிற்கு சென்று பார்த்த போது, கதவு பூட்டப்பட்டிருந்தது.
கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பவித்ரா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. மதுரவாயல் போலீசார், பவித்ரா உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE