குனியமுத்துார்:மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''உள்ளாட்சி துறை அமைச்சராக பதவியேற்ற பின், இதுவரை, 17 ஆயிரம் பேர் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, 500 பேர் துப்புரவு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்திட்டம் வரும் காலங்களிலும் தொடரும். டேங்க் ஆபரேட்டர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும்," என்றார்.தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பினையும், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளையும் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE