கோவை:கோவை மாநகர உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த சவுந்தரராஜன், ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி., யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ மற்றும் தெய்வேந்திரன், கோவை மாநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த, எஸ்.ஐ., கார்த்திக் கோவை மாநகரத்துக்கும், கோவை மாநகரத்தில் பணிபுரிந்து வந்த எஸ்.ஐ., பாரதிராஜா, திருப்பூர் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ்.ஐ., மாலதி, கோவை மாநகருக்கும், அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த எஸ்.ஐ., தனபாலன் கோவை மாநகருக்கும், கோவை சிங்காநல்லுார் குற்றப்பிரிவில் பணிபுரிந்த, எஸ்.ஐ.,சேகர் கோவை மாவட்டத்துக்கும், ரத்தினபுரி குற்றப்பிரிவில் பணிபுரிந்த எஸ்.ஐ., ரேவதி, கோவை மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE