திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெய்யும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான களக்காடு, மணிமுத்தாறு, பாபநாசம், குற்றாலம், கடையநல்லுார், சிவகிரி வரையிலும், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று காலை, 7:00 மணி துவங்கி மாலை, 4:00 மணி வரையிலான நிலவரப்படி, பாபநாசம் அணைப் பகுதியில், 8.5 செ.மீ., மழை பெய்தது.
மணிமுத்தாறு மலைப் பகுதியில், 7 செ.மீ., மழை பெய்தது.மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பி, 40 ஆயிரம் கன அடி உபரி நீர், தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில், 1992ல் கடும் மழை பொழிவால், அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பின், தற்போதுதான் இத்தகைய பலத்த மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு. அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE