நாமக்கல்:அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.
நாமக்கல்லில் ஒரே கல்லில் உருவான 18 அடி உயரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
அதிகாலை 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பின் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.மதியம் 12:00 மணிக்கு எண்ணெய் பஞ்சாமிர்தம் திருமஞ்சனம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE