சென்னை:தமிழக அரசின் தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலராக 2019ல் சண்முகம் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலையில் முடிந்தது. கொரோனா காரணமாக அவரது பதவி காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.பதவி நீட்டிப்பு அக்டோபரில் நிறைவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதற்கு மத்திய அரசு சம்மதித்ததால் அவரது பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்படி இம்மாதம் 31ம் தேதியுடன் அவரது பதவி காலம் நிறைவடைய உள்ளது.தனக்குப் பதவி நீட்டிப்பு வேண்டாம் என ஷண்முகம் எழுதிக் கொடுத்து விட்டதால் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை செயலராக நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE