ராமேஸ்வரம்:கச்சதீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்தது.
பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சதீவு, 1974க்கு முன்பு இந்தியா வசம் இருந்தது. பின் இத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின் இங்குள்ள அந்தோணியார் சர்ச் விழாவில் பங்கேற்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.1982ல் இலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததும்,கச்சதீவு விழாவுக்கு அந்நாடு தடை விதித்தது.
2009ல் இலங்கையில் அமைதி திரும்பியதும், கச்சதீவு சர்ச் விழாவில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்தாண்டுபிப்.,26, 27 ல் கச்சதீவு சர்ச் விழா நடக்க உள்ளதால், இதுதொடர்பாக நேற்று முன்தினம் யாழ்பாணத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கொரோனா பரவலை தடுக்க கச்சதீவு விழாவுக்கு இருநாட்டு பக்தர்கள் பங்கேற்க தடை விதிப்பது எனவும், நெடுந்தீவைச் சேர்ந்த 150 பாதிரியார்கள், பக்தர்கள் மட்டுமே பங்கேற்பது எனவும் முடிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE