சென்னை:பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 19 லட்சம் மாணவர்களுக்கு, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், வரும், 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், வைட்டமின் மாத்திரைகள் வழங்க, தமிழக முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 10, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், 19 லட்சம் மாணவர்களுக்கு, வைட்டமின் மாத்திரை வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., என, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE