சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால், ஐந்து லட்சத்து, 217 ஆண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 249 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 60 ஆயிரத்து, 563 மாதிரிகள்பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 194 பேர்; கோவையில், 59 பேர் என, 671 பேருக்கு தொற்று உறுதியானது.
பிரிட்டனில் இருந்து வந்தவர்களில், மேலும், இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பிரிட்டனில் இருந்து வந்த, 26 பேர்; தொடர்பில் இருந்த, 20 பேர் என, 46 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை, 1.49 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஐந்து லட்சத்து, 217 ஆண்கள் உட்பட, எட்டு லட்சத்து, 27 ஆயிரத்து, 614 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை பெற்றவர்களில், 827 பேர் நேற்று குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, எட்டு லட்சத்து, 8,571 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 2,077; கோவையில், 672 என, 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுதும், நேற்று எட்டு பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 236 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE