சென்னை:அமெரிக்காவின் விளக்கு இலக்கிய அமைப்பின், புதுமைப்பித்தன் நினைவு விருதுக்கு, எழுத்தாளர்கள் கலாப்பிரியா, க.பஞ்சாங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், சிறந்த படைப்பாளர்களுக்கு, புதுமைப்பித்தன் நினைவு விருதை வழங்கி வருகிறது.அந்த வகையில், 2019ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கவிதை, நாவல், திறனாய்வு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர் பேராசிரியர் க.பஞ்சாங்கம்;கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, நாவல், சினிமா வரலாற்று நுால்கள் என, பல்வேறு தளங்களில், 50 ஆண்டுகளுக்கும் மேல் எழுதி வருபவர் கலாப்பிரியா.இவர்கள் இருவரும், 2019ம் ஆண்டுக்கான, விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகள், மதுரையில், 23ம் தேதி நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE