திருப்பூர்:கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு, பொங்கல் பரிசு பொருள் ஆறு மையங்களில் வழங்கப்படுகிறது.தமிழக அரசின் தொழிலாளர் துறை, முதன்முறையாக பொங்கல் பரிசு பொருள் தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் மற்றும் ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்களுக்கு, பொங்கல் பரிசு பொருள் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 348 பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலா, இரண்டு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருகிலோ பருப்பு, அரை லிட்டர் ஆயில், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவை அடங்கிய, 450 ரூபாய் மதிப்புள்ள, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.இதுகுறித்து தொழிலாளர் சமூக பாதுகாப்பு உதவி கமிஷனர் ராஜ்குமார் கூறியதாவது:மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 348 பயனாளிகளுக்கு, பொங்கல் தொகுப்பு வந்துள்ளது. நஞ்சப்பா பள்ளி, வீரபாண்டி அரசு பள்ளி, அவிநாசி பெண்கள் பள்ளி, ஊத்துக்குளி அரசு பள்ளி, தாராபுரம் என்.சி.பி., நகராட்சி பள்ளி, காங்கயம் அரசு பள்ளி ஆகிய, ஆறு இடங்களில், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.டிச., 31ம் தேதிக்கு முன்னதாக, பதிவு செய்து, புதுப்பித்துள்ள வாரிய உறுப்பினர் பொங்கல் பரிசு பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE