பொள்ளாச்சி:தேவம்பாடிவலசு கிராமத்தில், 'நீரா' உற்பத்தி குறித்த மாநில அளவிலான கண்டுணர்வு திட்டத்தில், ஓராண்டில், 49 விவசாய குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி, தேவம்பாடிவலசு கிராமத்தில், கடந்த ஓராண்டில், தென்னை சாகுபடியாளர்களுக்கு மாநில அளவிலான, இரண்டு நாள் கண்டுணர்வு பயிற்சி நடக்கிறது.கொரோனா வைரஸ் பரவலுக்கு முன் துவங்கிய பயிற்சியில், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து, 16 குழுக்கள் பங்கேற்று பயிற்சி பெற்றன.கடந்த, இரண்டு மாதங்களாக நாள்தோறும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதுவரை, 49 தென்னை சாகுபடியாளர் குழுக்கள் பயிற்சி பெற்றுள்ளன.இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருபுல்லாணி வட்டாரத்தில் இருந்து, 'அட்மா' திட்ட மேலாளர் ராஜேஸ்வரி தலைமையில், 36 விவசாயிகள் தேவம்பாடிவலசுக்கு வருகை தந்தனர்.விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன், நிறுவனம் துவங்குவதற்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் பங்கு, விவசாயிகளை ஒருங்கிணைத்து பெயர் சூட்டுவது, நீரா உற்பத்தி மற்றும் சந்தை படுத்துதல் குறித்து விளக்கினார். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, நீரா பானம் மற்றும் சர்க்கரை வினியோகிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE