வால்பாறை:வால்பாறையில், தி.மு.க.,வின் விடியலை நோக்கி நிகழ்ச்சியில், தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தி.மு.க., நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமை வகித்தார். தொழிற்சங்க தலைவர்கள் பேசும் போது, 'தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 500 ரூபாய் வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளத்தில் ஆண்டுக்கு இருமுறை தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அந்தந்த மஸ்டரில் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE