பொங்கலுார்:மங்கலம் அருகேயுள்ள வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 55. பொங்கலுார் - கள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே மில்லில் பூபதிராஜா,33 என்பவர் சூப்பர்வைசராக உள்ளார்.இருவரும் அருகருகே உள்ள அறையில் தங்கி உள்ளனர். பூபதிராஜா தன் அறையில் சிகரெட் பிடித்ததை, ராமசாமி கண்டித்தார். ஆத்திரமடைந்த பூபதிராஜா இரும்பு கம்பியால் ராமசாமியை தாக்கியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் பூபதிராஜாவை கைது செய்து, கோர்ட் உத்தரவின் பேரில் அவர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE