கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஊராட்சியில், காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே பஸ் ஸ்டாபில், பயணிகள் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது.நிழற்கூரையில் டைல்ஸ் உடைந்தும், பயணிகள் அமர்வதற்கான சிமென்ட் மேடை சிதிலமடைந்துள்ளது. கட்டடத்தின் உள்ளேயும், வெளியேயும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அசுத்தமாக உள்ளதால், பொதுமக்கள் உள்ளே அமராமல், வெளியே நிற்கின்றனர்.இதனை தவிர்க்க, பயணிகள் நிழற்கூரை கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் செய்து, போஸ்டர் ஒட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE