உடுமலை:மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், பொங்கல் விழா நடந்தது.திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் உடுமலை அரசு கலைக் கல்லுாரி இணைந்து பொங்கல் விழா நடத்தியது. அரசு கல்லுாரியில் நடந்த விழாவில், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் தலைமை வகித்தார்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பொன்முடி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.மாணவர்களுக்கு பொங்கல் போட்டிகள் நடத்தப்பட்டன. பொங்கல் வைத்து, சுற்றுலாத்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் வழிபட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கலைக்குழுவினருக்கும், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., வேல்முருகன், டி.எஸ்.பி., ரவிக்குமார், சுற்றுலா அலுவலர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE