அன்னூர்:தி.மு.க.,வின் மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு பதிலடி கொடுக்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.அன்னூரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும்,கோவை வடக்குத்தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, அருண்குமார் பேசுகையில், "பூத் கமிட்டி அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்" என, அறிவுறுத்தினார்.தி.மு.க., வினர் மக்கள் கிராமசபை கூட்டம் என ஊராட்சி வாரியாக நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களுடைய புகார்களுக்கு விளக்கம் அளித்தும், அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கியும் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் அன்னூர் ஒன்றியச் செயலாளர்கள் அம்பாள் பழனிசாமி, சாய் செந்தில், அவிநாசி ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், வேலுச்சாமி, சுப்பிரமணியம் மற்றும் அ.தி.மு.க.,வின் பல்வேறு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE