கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற இரு வாலிபர்களை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கருமத்தம்பட்டியை அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியில், சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் சுற்றினர். அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.மூவரையும் பிடிக்க முயல, ஒரு வாலிபர் தப்பினார். இருவர் மட்டும் மக்களிடம் சிக்கினர். தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரித்த போது, திருப்பூர் சாமுண்டி புரத்தை சேர்ந்த அன்பரசு மகன் சிவபாலன், 24 மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கதிராம்பட்டியை சேர்ந்த நல்லுசாமி மகன் ராஜசேகர், 26 என்பது தெரிந்து. இருவரிடமிருந்து, 400 கிராம் கஞ்சா பறிமுல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE