மேட்டுப்பாளையம்:சிதைந்த நிலையில் உள்ள அகழியை, ஆழமாகவும், அகலமாகவும் தோண்ட, வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறையிலிருந்து,பெத்திகுட்டை வரை, வனப்பகுதி ஓரத்தில், கடந்த பல ஆண்டுக்கு முன் அகழி தோண்டப்பட்டது. இதில் பாறைகள் அகற்றாமல் அப்படியே விடப்பட்டது. வனப்பகுதியில் உள்ள யானைகள், பாறைகள் வழியாகவும், சிதைந்த அகழி வழியாகவும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.அகழியை சீரமைக்க விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி சீரமைக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' சிதைந்த நிலையில் உள்ள அகழியில், வளர்ந்த முட்செடிகளை வனத்துறையினர் அகற்றுகின்றனர். இதனால் யானைகள் வருவதை தடுக்க முடியாது. எனவே அகழியை ஆழமாகவும், அகலமாகவும், பாறைகளை அப்புறப்படுத்தி தோண்ட வேண்டும். அப்போது யானைகள் விவசாய நிலங்களுக்கு, வருவதை தடுக்க முடியும்,' என்றனர்.இதுகுறித்துசிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில்,"சிறுமுகை வனப்பகுதியில் உள்ள அகழிகளை, 3 மீட்டர் அகலத்திற்கும், இரண்டரை மீட்டர் ஆழத்திலும் சீரமைக்கும் பணி நடக்கிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE