ராமநாதபுரம் : சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரத்தில் சிலம்பாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா, ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட இளைஞர் சங்கம் மற்றும் ஆயிர வைசிய மகா சபை சார்பில் தேசிய இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் துவக்கப்பள்ளியில் சிலம்பாட்ட போட்டி துவக்க விழா நடந்தது.நேரு யுவகேந்திரா அலுவலர் நோமன் அக்ரம் தலைமை வகித்தார். ஆயிரவைசிய கல்வி கமிட்டி தலைவர் மோகன், பள்ளி தாளாளர் வெங்கடாச்சலம் போட்டிகளை துவக்கி வைத்தனர், போட்டிகள் ஜன.,12, 14ல் நடத்தப்பட்டு 16ல் பரிசளிப்பு விழா நடக்கிறது. பல்வேறு சிலம்ப பள்ளி மாணவர்கள் 200 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE