ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்கிறது. நகரில் முக்கிய ரோடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
இலங்கை, குமரி கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சில இடங்களில் கனமழையும், மிதமான மழையும் விட்டு, விட்டு தொடர்ந்து பெய்கிறது.ராமேஸ்வரத்தில்- 52.20, தங்கச்சிமடம்-67.80, பாம்பன்- 38, மண்டபம்- 38, ராமநாதபுரம் - 24.50, பரமக்குடி - 9.60, ஆர்.எஸ்., மங்கலம் - 17,50, கமுதி- 8.20, திருவாடானை- 31, வட்டனம் -48.10, தீர்த்தாண்டதானம்-48, வாலிநோக்கம்- 20.20 முதுகுளத்துார்- 9, கடலாடி-11.60, தொண்டி-42.30 மி.மீ., மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஆகிய ஊராட்சிகளில் போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் ரோடு, குடியிருப்பு தெருக்களில் தேங்கியுள்ளது. கோட்டைமேட்டுதெரு, ஓம்சக்திநகர், சிவஞானஒளிபுரம்ரோடு, ராமேஸ்வரம் ரோடு பாலம் வேலை நடைபெறும்பகுதி, பழைய பஸ் ஸ்டாண்ட், போக்குவரத்து பணிமனைஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மழையால் 3 நாட்களாக வியாபாரம் செய்ய முடியாமல் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE