பரமக்குடி : பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட பாரதிய கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் ராம்தாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் சேகர், நிர்வாகி ராமநாதன் முன்னிலை வகித்தனர். பி.எம்.எஸ்., மாநில துணை தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார்.கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் கைத்தறி கச்சாப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கைத்தறி நெசவாளர் சங்கங்களில் தேங்கியுள்ள கோ-ஆப்டெக்ஸ் சேலை ரகங்களை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.எம்.எஸ்., மாவட்ட தலைவர் பாரதிராஜா, பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மோகன்ராம் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE