பரமக்குடி : பரமக்குடி தாலுகாவில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால், பயிர்கள் அனைத்தும் நீரில்மூழ்கி வருகின்றன.அறுவடை செய்ய வழியின்றி விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.மாவட்டத்தில், பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஒன்றிய பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் பயிரிடப்பட்டது.
தொடர்ந்து பருவம் தவறிய மழையால் சில பகுதிகளில் பயிர்கள்வாடினாலும், மீண்டும் முளைக்கத்துவங்கியது.இந்நிலையில் அறு வடைக்கு தயா ராகிய பயிர்களுக்கு மத்தியில் கடந்த வாரம்வரை 5 ஆயிரம் ஏக்கர் அளவில் மட்டுமே மழைநீரில் சாய்ந்துபாதிப்பு இருந்தது.தற்போது நேற்று முன் தினம் இரவு தொடங்கி, நேற்று நாள் முழுவதும் விடாமல்அடை மழை பெய்தது. அனைத்து பகுதிகளிலும் நெற்கதிர்கள் மழைநீரில் சாய்ந்து அழுகி வருகின்றன. தொடர்ந்து சில பயிர்கள் நீரில் மூழ்கி மீண்டும் முளைப்புத்திறன் பெற்று வீணாகிஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE