மதுரை : மதுரை நெல்பேட்டை, ஏ.வி. பாலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முனிச்சாலை ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி நெல்பேட்டைக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
வைகையாற்று தரை பாலங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் யானைக்கல், ஏ.வி.பாலம், அண்ணாநகர் பாலங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஏ.வி.பாலத்தில் இருந்து நெல்பேட்டைக்கும், வக்கீல் புதுத்தெருவுக்கும் வாகனங்கள் தடையின்றி சென்று வந்தநிலையில், சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.இதை தவிர்க்க நேற்று முதல் சோதனை முயற்சியாக சிறு மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி முனிச்சாலை ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி நெல்பேட்டை, யானைக்கல்லுக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் இடதுபுறம் திரும்பி வெற்றிலை பேட்டை பகுதியில் உள்ள சிறு சந்துகள் வழியாக இலகுரக வாகனங்கள் நுழைந்து கீழமாரட்வீதி வழியாக யானைக்கல் பகுதிக்கு செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் கீழவாசல் சந்திப்பிற்கு சென்று கீழமாரட் வீதியாக செல்ல வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE