உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.
கல்லுாரித் தலைவர் பாலகிருஷ்ணன், தாளாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, முதல்வர் ரவி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போஸ், சின்னன், திருமாவளவன், குபேந்திரன், அம்மாவசி, துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். அனைத்து துறையினரும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் டோமினிக்சேவியோ பரிசுகள் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE